சோழவந்தான், மே 26: சோழவந்தான் அருகே குருவித்துறையை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகன் பட்டாசு பாலு என்ற தங்கபாலமுருகன் (26). திருமணமாகாத இவர், அதே பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு செல்ல உள்ள 12 வயது மாணவனுக்கு நேற்று இரவு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து மாணவன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளான். இது குறித்து அவர்கள் காடுபட்டி போலீசாரிடம் புகார் அளித்தனர். சிறுவனிடம் போலீசார் தனிப்பட்ட முறையில் நடத்திய விசாரணையில் சம்பவம் உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார், தங்கபாலமுருகனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், மாஜிஸ்திரேட் உத்தரவின் அடிப்படையில் மதுரை மத்திய சிறையில் 14 நாள் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.
The post மாணவனுக்கு தொல்லை வாலிபர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.