‘ஆன்டி’ என சொன்ன விவகாரம் சிம்ரனிடம் மன்னிப்பு கேட்டார் ஜோதிகா

சென்னை: சில நாட்களுக்கு முன் விருது விழா நிகழ்ச்சியொன்றில் பேசிய சிம்ரன், ‘சக நடிகை ஒருவரிடம் குறிப்பிட்ட படத்தில் நீங்கள் நடித்தது சர்ப்பிரைஸாக இருந்ததாக சொன்னேன். அதற்கு அவர் உங்களைப் போல் ஆன்டி வேடங்களில் நடிப்பதை விட இது பரவாயில்லை என சொன்னார். இது எனக்கு வேதனையை தந்தது. அவரைப் போல் டப்பா வேடங்களில் நடிப்பதை விட நான் நடிக்கும் கேரக்டர்கள் மேலானது என பேசினார். சிம்ரன் டப்பா ரோல் என குறிப்பிட்டதால் ஜோதிகா நடித்த டப்பா கார்டெல் என்ற இந்தி வெப்சீரிஸை பற்றித்தான் சொல்கிறார் என்றும் ஏற்கனவே தன்னுடன் நடித்த சக நடிகை அவர் என சொன்னதால் அது ஜோதிகாவேதான் என்றும் ரசிகர்கள் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் இது பற்றி இப்போது பேசியுள்ள சிம்ரன், ‘‘நான் என்ன சொல்ல நினைத்தேனோ அது சம்பந்தப்பட்டவரை சென்றடைந்துவிட்டது. ஆம், அந்தக் கருத்துக்குப் பிறகு எனக்கு அவரிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. அதில், ‘மன்னிக்கவும், நான் உங்களை புண்படுத்த நினைக்கவில்லை’ என்று எழுதப்பட்டிருந்தது’’ என்று சிம்ரன் கூறினார். இதன் மூலம் சிம்ரனிடம் ஜோதிகா மன்னிப்பு கேட்டுவிட்டார் என நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

Related Stories: