ஐதராபாத்: வரும் அக்டோபர் 16ம் தேதி திரைக்கு வரும் ‘விருஷபா’ என்ற பான் இந்தியா படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள மோகன்லால், ‘இது சிறப்பு வாய்ந்தது. இதை என் எல்லா ரசிகர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். இத்துடன் இதற்கான காத்திருப்பு நிறைவடைகிறது. பெருமிதத்துடனும், ஆற்றலுடனும் புயல் விழித்தெழுகிறது. உங்களுடைய ஆன்மாவை தூண்டும் வகையிலும், காலத்தை எதிரொலிக்க கூடிய வகையிலும் உருவாக்கப்பட்ட கதையான ‘விருஷபா’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறேன். உங்களின் அன்பு எப்போதும் எனக்கு பெரிய சக்தியாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். மலையாளம் மற்றும் தெலுங்கில் பாலாஜி டெலிபிலிம்ஸ் தயாரித்து இருக்கும் இப்படத்தை நந்தகிஷோர் எழுதி இயக்கி இருக்கிறார். கனெக்ட் மீடியா வழங்குகிறது. ஷோபா கபூர், ஏக்தா ஆர்.கபூர், சி.கே.பத்மகுமார், வருண் மாத்தூர், சவுரப் மிஸ்ரா, அபிஷேக் எஸ்.வியாஸ், விஷால் குர்னானி, ஜூஹி பரேக் மேத்தா இணைந்து தயாரித்துள்ளனர்.