வேலைக்கு செல்லும் பெண்கள் எல்லா நேரமும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கருத்தை மையப்படுத்தி இயக்கியுள்ளார், ஜெயகாந்தன் ரெங்கசாமி. 4 இளைஞர்களாக கே.எம்.ஆர்., விஜயன், சரவணன்,ரஞ்சன், 4 இளம் பெண்களாக தர்ஷினி, திருக்குறளி, இந்து, சுபிக்ஷா, ஆடை நிறுவன முதலாளி ‘அருவா சண்ட’ இசக்கி ராஜா ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். வில்லன் ரோலில் பிரியராஜா வித்தியாசமாக நடித்துள்ளார். ஒரே இடத்தில் வெவ்வேறு கோணங்களில் காட்சிகளை பதிவு செய்துள்ளார், ஒளிப்பதிவாளர் அரக்கோணம் யுவா. கதை நகர்வுக்கு ஜெ.கதிரின் பின்னணி இசை பேருதவி செய்துள்ளது. உண்மை சம்பவத்தை இன்னும் அழுத்தமாகவும், ஜனரஞ்சகமாகவும் படமாக்கி இருக்கலாம்.
திருப்பூர் குருவி: விமர் சனம்
