கடந்த 15ம் தேதி நடந்த பத்திரப்பதிவின் போது, 30 ஆயிரம் ரூபாயை பதிவுக்கட்டணமாக செலுத்தியுள்ளனர். இந்த குடியிருப்பு மும்பையின் கோரேகான் பகுதியிலுள்ள இம்பீரியல் ஹைட்ஸில் அமைந்துள்ளது. இது அந்தேரி மற்றும் மாலாடு இடையே இருக்கிறது. மும்பையின் புறநகர் ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ள பகுதி என்பதால், இம்பீரியல் ஹைட்ஸில் பல தொழிலதிபர்கள் வீடு வாங்கியுள்ளனர்.
கடந்த 2024 ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை இப்பகுதியில் 47 சொத்துகள் விற்கப்பட்டு, மொத்தம் ரூ.168 கோடி பரிவர்த்தனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தி படவுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் டாப்ஸி என்பதால், அவர் புது வீடு வாங்கிய விஷயம் அதிக கவனம் பெற்றுள்ளது.