சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் கடந்த 2012ம் ஆண்டு வெளியான ‘அட்டக்கத்தி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘எதிர் நீச்சல்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நந்திதா தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் எதிர்பார்த்த வாய்ப்புகள் இல்லை. சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நந்திதா ஸ்வேதா, ஹோம்லியான வேடங்களில் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். பர்த்டே பார்ட்டிக்காக நண்பர்களுடன் பாரில் மது குடித்து ஃபுல் போதையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அரைகுறை ஆடையில் இருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ‘இந்த குடும்ப பாங்கான நடிகைக்கு என்ன ஆச்சு? பட வாய்ப்பு இல்லாததால் இதுபோல் ஆகிவிட்டாரா? இவரிடமிருந்து இப்படியொரு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை’ என நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.