மேலும் பணத்தை திருப்பி கேட்ட ஜாகிர் உசேனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து ஜாகிர் உசேன் பழநி தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் அயூப்கானிடம் நேற்று விசாரணை நடத்தினர். இதில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அயூப்கானை கைது செய்ய போலீசார் முற்பட்டனர். அப்போது அவர் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி அலறினார். இதையடுத்து போலீசார் அவரை பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
The post பழநி அதிமுக நிர்வாகி பல லட்சம் மோசடி: விசாரணையில் நெஞ்சு வலிப்பதாக அலறல் appeared first on Dinakaran.