செல்போன் பறித்த மாணவன் கைது

ஆலந்தூர்: கிண்டியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் மற்றும் கல்லூரி மாணவன் ஆகிய இருவர் கைது செய்யபட்டனர். ஆலந்தூர் உசேன் சுபேதார் தெருவை சேர்ந்தவர் கபிலன் (20). இவர் கிண்டி பேருந்து நிலையத்தில் கல்லூரிக்கு செல்ல நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இருவர், கபிலன் அருகே சென்று அவரது செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கபிலன் கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்து நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். இதில் கபிலனின் செல்போனை பறித்தவர்களில் ஒருவன் கல்லூரி மாணவன் சூர்யா (18) மற்றும் அதே கல்லூரியில் படிக்கும் சிறுவன் என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், சூர்யாவை புழல் சிறையிலும் ,சிறுவனை சிறார் சீர்திருத்த பள்ளியிலும் சேர்த்தனர்.

The post செல்போன் பறித்த மாணவன் கைது appeared first on Dinakaran.

Related Stories: