வீட்டில் இருந்த கண்ணாடி கதவுகள், ஜன்னல்களை உடைத்து உள்ளனர். வீட்டில் இருந்த சரத்தின் தந்தை முருகனின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொன்று விடுவேன் என்று கூறி உள்ளனர். அப்போது, வீட்டில் இருந்தவர்கள் அவசர போலீஸ் 100க்கு தொடர்புகொண்டு கூறி உள்ளனர். உடனே, கூடுவாஞ்சேரி போலீசார் தியாகராஜன் மற்றும் ராஜசேகரன் ஆகியோர் சைரன் சத்தத்துடன் மோட்டார் சைக்கிளில் அப்பகுதிக்கு வந்துள்ளனர். அந்த, தெரு முட்டு சந்து என்பதால் காரில் வந்த கும்பல் தப்பியோட முயற்சித்துள்ளனர். போலீசார் வந்த மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளிவிட்டு, அந்த கும்பல் தப்பி ஓடியது. இது, சம்பந்தமாக காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த கும்பல் பெரிய ஒத்திவாக்கம் சிவன் மலைக்கோயிலில் பதுங்கி இருப்பதாக திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. செங்கல்பட்டு எஸ்.பி. சாய்பிரனீத், மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. அறிவழகன் ஆகியோர் உத்தரவின்பேரில், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், எஸ்.ஐ.க்கள் விஜயகுமார், ரமேஷ் மற்றும் 10 பேர் ெகாண்ட தனிப்படையினர் ஒத்திவாக்கம் சிவன் மலையை சுற்றி வளைத்தனர்.
அப்போது, அங்கு தூங்கிக்கொண்டிருந்த சுனில் (எ) சுதர்சனம் (21), ரத்தினம் (எ) சேவுக ரத்தினம் (27), பாலாஜி (23) ஆகிய 3 பேரை பிடித்தனர். அப்போது, சுனில் தப்பி ஓட முயற்சித்தபோது கீழே விழுந்ததில் இடது கால் உடைந்தது. இதையடுத்து, போலீசார் மூவரையும் பிடித்து ஜீப்பில் ஏற்றினர். கால் உடைந்த சுனில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, 3 பேரிடமும், போலீசார் நடத்திய விசாரணையில், தங்களை திருமண விழாவில் மதிக்காமல் நடந்து கொண்ட சஞ்சய் மற்றும் அவனுக்கு ஆதரவு அளிக்கும் சரத் ஆகியோரை கொல்ல திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரத்தினம் (எ) சேவுக ரத்தினம், பாலாஜி ஆகிய 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சுனில் (எ) சுதர்சனம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
The post திருமண விழாவில் மதிக்காததால் ஆத்திரம்; வாலிபரை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேர் கைது appeared first on Dinakaran.