பெரம்பூர்: அயனாவரம் ஜீவா பார்க் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அயனாவரம் இன்ஸ்பெக்டர் பரணிநாதனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை மேற்கண்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தபோது, இரண்டரை கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், அயனாவரம் வெங்கடேசன் தெருவை சேர்ந்த ஆகாஷ் (எ) காக்கா (24), அயனாவரம் சோமசுந்தரம் தெருவை சேர்ந்த பிரித்விராஜ் (எ) பூனை (22), வில்லிவாக்கத்தை சேர்ந்த பிரவீன் குமார் (22) என தெரியவந்தது. அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post அயனாவரம் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.