பாலியல் தொல்லை; ஹெச்.எம் டிஸ்மிஸ்

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கருங்கல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடங்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராஜா (52). இவர், அப்பள்ளியில் படிக்கும் மாணவிக்கு ஒன்றரை மாதத்திற்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனை அறிந்த பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியர் ராஜாவை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்தனர்.

பின்னர், கைதான தலைமை ஆசிரியர் ராஜா மீது துறை ரீதியான விசாரணையை கல்வி அதிகாரிகள் நடத்தி, அவரை சஸ்பெண்ட் செய்தனர். தொடர்ந்து, தாரமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ராஜீ, துறைரீதியான மேல் விசாரணையை நடத்தினார். அதன் முடிவில், மாணவிக்கு தலைமை ஆசிரியர் ராஜா பாலியல் தொல்லை கொடுத்து வந்தது உறுதியானது. இதையடுத்து அவரை டிஸ்மிஸ் செய்து, மாவட்ட கல்வி அலுவலர் ராஜீ உத்தரவிட்டுள்ளார்.

 

The post பாலியல் தொல்லை; ஹெச்.எம் டிஸ்மிஸ் appeared first on Dinakaran.

Related Stories: