திருவொற்றியூர்: எண்ணூரில் சாலையோரம் நின்றிருந்த 6 கன்டெய்னர் லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவொற்றியூர் கேவிகே குப்பம் அருகே எண்ணூர் விரைவு சாலை சர்வீஸ் சாலையில் ஏராளமான கன்டெய்னர் லாரிகள் நேற்று முன்தினம் இரவு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது, அவ்வழியே மது போதையில் வந்த 4 பேர் லாரியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றனர். இதனை அறிந்த ரோந்து போலீசார் எண்ணூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், தண்டையார்பேட்டையை சேர்ந்த ராமசந்திரன் (42), தேவராஜ் (36), அர்ஜூனன் (41), ராஜசேகர் (45) ஆகியோர் லாரி கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது தெரிந்தது. அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post சாலையோரம் நிறுத்தி இருந்த கன்டெய்னர் லாரிகளை அடித்து நொறுக்கிய 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.