பின்னர் வெங்கடேசன், சந்தேகத்தின்பேரில், பாஸ்கர் கொடுத்த தங்க நகைகளை பரிசோதனை செய்தபோது, அது போலி நகைகள் என தெரியவந்தது. உடனே, வெங்கடேசன், பாஸ்கரை பிடித்து வைத்துக்கொண்டு வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாஸ்கர் என்பவர் ஏற்கனவே சுமார் 11 தடவை தங்க நகைகள் என போலியான தங்க நகைகள் அடகு வைத்து, மொத்தம் ரூ.12,21,000 பணம் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது. பின்னர் அவரை நேற்று கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 245 கிராம் எடை கொண்ட போலி தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
The post போலி நகைகளை அடகு வைத்து ரூ.12.21 லட்சம் மோசடி செய்தவர் பிடிபட்டார் appeared first on Dinakaran.