17 வயது சிறுமி கர்ப்பம்: காதலன் மீது போக்சோ வழக்கு

சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அமுதா (39, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில், 17 வயதுடைய மூத்த மகள் 12ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பாரிமுனையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி கார்த்திக் என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்த சிறுமி, அவரை காதலிப்பதாகவும், தற்போது நான் கர்ப்பமாக உள்ளேன், எனவும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அமுதா, இருவரையும் கடுமையாக திட்டி, வீட்டில் இருந்து வெளியேற்றினார். இதையடுத்து, சிறுமி, கார்த்திக்கின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமுதாவிடம் செல்போனில் பேசிய சிறுமி, வயிற்று வலி அதிகமாக இருப்பதாக கூறி அழுதுள்ளார். இதையடுத்து, அமுதா சிறுமியை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சிறுமியின் காதலன் கார்த்திக் (20) மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post 17 வயது சிறுமி கர்ப்பம்: காதலன் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: