மீரட் நகர எஸ்பி கூறுகையில், ‘மீரட்டின் இந்திரா நகரில் வசிக்கும் சவுரப் ராஜ்புத் – முஸ்கான் தம்பதிகள், 2016ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தனது காதலுக்காக வெளிநாட்டு வேலையை சவுரப் ராஜ்புத் துறந்தார். கடந்த 2019ம் ஆண்டில் தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே முஸ்கானுக்கு சவுரப்பின் நண்பரான சாஹில் மீது கள்ளக்காதல் ஏற்பட்டது.
தன் மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் சவுரப்பிற்குத் தெரிந்ததால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. விவாகரத்து வரை சென்றது; இருந்தாலும் தனது மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கடந்த 2023ல் மீண்டும் அமெரிக்காவிற்கு வேலைக்கு சென்றார். இந்த நிலையில் தான் தனது 6 வயது மகளின் பிறந்தநாளில் கலந்து கொள்வதற்காக கடந்த பிப்ரவரி 24ம் தேதி அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சவுரப் ராஜ்புத் வந்தார்.
இதற்கிடையே முஸ்ககானுக்கும் சாஹில்லுக்கும் இடையேயான கள்ளக்காதல் தொடர்ந்ததால், அவர்கள் இருவரும் சேர்ந்து சவுரப்பைக் கொல்ல திட்டமிட்டனர். அதற்காக சவுரப் ராஜ்புத்துக்கு கடந்த மார்ச் 4ம் தேதி உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தனர். அவரும் சாப்பிட்டுவிட்டு உறங்கினார். அதனை வாய்ப்பாக பயன்படுத்தி கூர்மையான ஆயுதங்களால் சவுரப்பைக் கொடூரமான முறையில் கொன்றனர். பின்னர் தனது காதலனுடன் சேர்ந்து கணவரின் உடலை 15 துண்டுகளாக மனைவி வெட்டினர்.
உடல் பாகங்களை அப்புறப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதால், வீட்டில் இருந்த டிரம்மில் போட்டனர். பின்னர் சிமெண்ட் கலவையை கொட்டி உடல் பாகங்களை டிரம்மில் போட்டு மூடினர். அடுத்த சில நாட்கள் கழித்து, அக்கம்பத்தினர் சவுரப் ராஜ்புத் குறித்து விசாரிக்க தொடங்கினர். அப்போது முஸ்கான், ‘எனது கணவர் மலை வாஸ்தலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்’ என்று கூறினார். அடுத்த சில நாட்கள் கழித்து, அவரை தேடி செல்வதாக கூறிவிட்டு தனது கணவரின் செல்போனை எடுத்துக் கொண்டு தனது கள்ளக்காதலனுடன் இமாச்சல் பிரதேசம் கவுசானிக்கு முஸ்கான் சென்றுள்ளார்.
இதற்கிடையே சவுரப் ராஜ்புத் மாயமானதாக அவரது உறவினர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி சவுரப் ராஜ்புத்தின் மனைவி முஸ்கானையும், அவரது காதலன் சாஹில் என்பவரையும் தேடி பிடித்து விசாரித்தோம். தொடர் விசாரணையில் சவுரப் ராஜ்புத் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிமெண்ட் கலவையால் மூடப்பட்டிருந்த டிரம்மை உடைத்து உடல் பாகங்களை எடுத்தோம்.
இதற்காக வீட்டில் இருந்த டிரம்மை, ஒரு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பிணவறைக்கு கொண்டு சென்றோம். அங்கு துளையிடும் இயந்திரத்தினை பயன்படுத்தி, சவுரப்பின் சிதைந்த உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. சவுரப்பின் குடும்பத்தினரின் அளித்த புகாரின் அடிப்படையில், முஸ்கான், அவரது காதலன் சாஹில் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது போலீஸ் கஸ்டடியில் இருக்கும் இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.
The post மகளின் பிறந்த நாளுக்காக அமெரிக்காவில் இருந்து வந்த நிலையில் கள்ளக்காதலுக்காக காதல் கணவரை 15 துண்டுகளாக வெட்டி கொன்ற மனைவி: உடல் பாகங்களை சிமெண்ட் கலவையுடன் டிரம்மில் அடைத்து வைத்த கொடூரம் appeared first on Dinakaran.