கலசம் ஒன்றில் தேங்காயுடன் மாவிலைகள், சந்தனம், குங்குமம், பூ ஆகியவற்றை வைத்து மஞ்சள் கயிற்றினைக் கலசத்தின் கழுத்தில் கட்டி விட வேண்டும்.அதிகாலையில் எழுந்து குளித்து கார அடை ெசய்து பழம், பொரி முதலானவற்றை வைத்து மஞ்சள் கயிற்றினைக் கலசத்தின் முன் வைத்து தீபாராதனை செய்து வழிபட வேண்டும். ‘மாசிக் கயிறு பாசி படியும்’ என்பது வழக்கு. இப்பண்டிகையில் திருமாங்கல்ய சரடினை மாற்றிக்கொள்ள வேண்டும்.கார அடை, குங்குமம், மஞ்சள், ரவிக்கைத் துண்டு ஆகியவற்றை சுமங்கலிப் பெண்களுக்கு தர வேண்டும். மஞ்சள் கயிற்றைக் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். உபநயனம் செய்து கொள்வதும், நோன்புக் கயிறு அணிவதும் நன்மை தரும்.
– டி.லதா, நீலகிரி.
The post காரடையான் நோன்பு appeared first on Dinakaran.