கட்டாய திருமணம்: சிறுமி தற்கொலை.! தாய், கணவர் போக்சோவில் கைது

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பழையூர் கிராமத்தை சேர்ந்தவர் கொழந்தையம்மாள்(36). கருத்துவேறுபாடால் கணவரை பிரிந்து மகள் வைசாலி (17), மகன் விஷாலுடன் (16) வசித்து வருகிறார். வைசாலி 10ம் வகுப்பை பாதியில் நிறுத்தி விட்டு, வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் (18ம்தேதி), காலை வைசாலியை மாரண்டஅள்ளி அருகே தேக்லான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த தாமோதரன் (29) என்பவருக்கு, கொழந்தையம்மாள் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த வைசாலி, திருமணம் நடந்த அன்று மதியமே சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பாலக்கோடு அனைத்து மகளிர் ேபாலீசார் போக்சோ வழக்கு பதிந்து கொழந்தையம்மாள், தாமோதரன் ஆகியோரை கைது செய்தனர்.

The post கட்டாய திருமணம்: சிறுமி தற்கொலை.! தாய், கணவர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: