இதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகமான பயணிகளை நிறுத்தி விசாரித்தனர். இதில், சென்னையை சேர்ந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண், துபாய்க்கு சுற்றுலா பயணியாக சென்று திரும்பியிருந்தார். அப்பயணியின் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார். இதனால் அவரது உடைமைகளை முழுமையாக சோதனை செய்தனர். எனினும், அவரது உடைமைகளில் எதுவும் கிடைக்கவில்லை.
எனினும், அவர்மீது சந்தேகம் தீராமல் தனியறைக்கு கொண்டு சென்று, உடைகளை களைந்து சோதனை செய்தனர். இதிலும் எவ்வித பொருளும் சிக்கவில்லை. எனினும், அவர்மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, அவரது உடைமைகளை ஒவ்வொன்றாக எடுத்து சோதனை செய்தபோது, அதில் மிகப்பெரிய தண்ணீர் பாட்டில் வைத்திருப்பதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அப்பாட்டிலை தூக்கியபோது கனமாக இருந்தது. அதை திறந்து பார்த்தபோது, பாட்டிலில் தண்ணீருடன் ஏதோ ஒரு பொருள் மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
இதனால் அந்த தண்ணீர் பாட்டிலை உடைத்து, அதற்குள் தண்ணீருடன் கடத்தி வந்திருந்த ரூ.1.23 கோடி மதிப்பிலான 1.50 கிலோ தங்கப் பசையை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, துபாயிலிருந்து சென்னைக்கு பாட்டிலில் தண்ணீருடன் தங்கப் பசை கடத்தி வந்த சென்னை பயணியை கைது செய்து, பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
The post துபாயிலிருந்து பாட்டில் தண்ணீரில் 1.5 கிலோ தங்கப்பசை கடத்தி வந்த சென்னை விமான பயணி கைது appeared first on Dinakaran.