ராஜாமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் மகேஷ்பாபுவின் அப்பா வேடத்தில் நடிக்க நானா படேகரை நடிக்க வைக்க ராஜமவுலி விரும்பினார். இதற்காக புனேயிலுள்ள நானா படேகரின் பண்ணை வீட்டுக்கு சென்று அவரிடம் ராஜமவுலி கதையை கூறினார். இந்த கேரக்டரில் நடிக்க ரூ.20 கோடி வரை சம்பளமாக தருவதாகவும் அவர் தெரிவித்தார். நானா படேகர் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வரைதான் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கதையை கேட்ட நானா படேகர், தனது கேரக்டர் வலுவானதாக இல்லை. அதனால் இதில் நடிக்க முடியாது என ராஜமவுலியிடம் கூறியுள்ளார். அவரது பதிலால் ராஜமவுலி அதிர்ச்சி அடைந்திருக்கிறார். நானா படேகரை சம்மதிக்க வைக்க முயன்றும் பயனில்லை என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.