சீர்காழி, மே 23: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர இளைஞரணி அமைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் பரிந்துரையின் பேரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உத்தரவின் பேரில் சீர்காழி திருமஞ்சன வீதியில் வசிக்கும் பிரவீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக கார்த்திக் ஆனந்தராஜ், சபரி வாசன், அரவிந்த், சாய் விக்னேஷ், பாரதி, ஹரிஹரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நியமனம் செய்யப்பட்ட நகர இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றனர்.
The post சீர்காழி நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் நியமனம் appeared first on Dinakaran.