திருக்கடையூர் அருகே டி.மணல்மேடு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

தரங்கம்பாடி, ஜூன் 12: மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகே டி.மணல்மேடு கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. திருக்கடையூர் அருகே டி.மணல்மேடு கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் மகா மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை டி.மணல்மேட்டில் உள்ள மார்கண்டேயர் கோயிலில் இருந்து கரகம் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க மெயின் ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தது.

அதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை டி.மணல்மேடு கிராமத்தினரா செய்திருந்தனர் திருவிழாவை முன்னிட்டு பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post திருக்கடையூர் அருகே டி.மணல்மேடு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: