நாகப்பட்டினம், மே 22: முதல்வரின் பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் முதிர்வுத்தொகை பெற நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2002முதல் 2007 வரையிலான காலகட்டங்களில் விண்ணப்பித்து பயனடைந்து, வைப்புத்தொகை பத்திரம் பெறப்பட்டு இப்போது 18 வயது முதிர்வடைந்த பெண் குழந்தைகளுக்கு உடனடியாக முதிர்வுத்தொகை வழங்கப்படவுள்ளது. எனவே பயனாளிகளின் வங்கி கணக்கு புத்தகம், மாற்றுச்சான்றிதழ்,
10ம் வகுப்பு மதிப்பெண் சான்று மற்றும் வைப்புத்தொகை ரசீது ஆகியவற்றின் நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர்கள் மற்றும் மகளிர் ஊர்நல அலுவலர்களை பயனாளிகள் உடனடியாக அணுகலாம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் கண்டறிய விண்ணப்பங்களின் விபரங்கள் https://www.nagapattinam.nic.in/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்விவரங்களை சரிபார்த்து, விண்ணப்பங்கள் தொடர்பாக விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை appeared first on Dinakaran.