தூத்துக்குடி, மே 21: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கூட்டுறவு நியாயவிலை கடைகளில் இணை பதிவாளர் தலைமையிலான பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தலைமையில் துணை பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்), 30 கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் 10 முதுநிலை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 40 கூட்டுறவு துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்பு பறக்கும் படை ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டு நேற்று தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 90 கூட்டுறவுத்துறை நியாயவிலை கடைகளில் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில் நியாயவிலைக் கடைகளில் இருப்பு குறைவு,இருப்பு அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்புடைய நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு இருப்பு குறைவிற்காக ரூ.9725 அபராதமாக விதிக்கப்பட்டது. இதேபோல் கூடுதலாக கண்டறியப்பட்ட பொருட்களுக்காக ரூ.525 அபராதம் என மொத்தம் ரூ.10250 அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
The post ரேஷன் கடைகளில் பறக்கும்படை ஆய்வு appeared first on Dinakaran.