மதுரையில் பலத்த மழை: வீட்டின் சுவர் இடிந்து பெண் பரிதாப சாவு

அவனியாபுரம், மே 20: மதுரையில் நேற்று பெய்த பலத்த மழையால், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை, அவனியாபுரம் அருகே வலையங்குளம் முத்தாலம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அம்மாபிள்ளை(65). இவரது மகன் வழிப்பேரன் வீரமணி(10). இவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் வீரண்ணன் மனைவி வெங்கட்டம்மா(55). இந்நிலையில் நேற்று மாலை இப்பகுதியில் பலத்த மழை ெபய்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வெங்கட்டம்மா, அருகில் இருக்கும் அம்மாபிள்ளையின் வீட்டிற்கு வந்தார். அவர்கள் இருவரும் வீட்டின் முன்புறம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இவர்களுடன் வீரமணியும் இருந்துள்ளார்.

அப்போது மழைக்கு தாங்காமல், திடீரென அம்மாபிள்யைின் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய வெங்கட்டம்மா, அம்மாபிள்ளை மற்றும் அவரது பேரன் வீரமணி ஆகியோர் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வலையங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக மூவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கட்டம்மா பரிதாபமாக உயிரிழந்தார். அம்மாபிள்ளை மற்றும் வீரமணிக்கு சிகிச்சை தொடர்கிறது.

The post மதுரையில் பலத்த மழை: வீட்டின் சுவர் இடிந்து பெண் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Related Stories: