தஞ்சை உழவர் சந்தையில் காய்கறிகள் விலை சரிவு தக்காளி கிலோ ரூ.16க்கு விற்பனை

 

தஞ்சாவூர், மே 19: தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையின் மையப்பகுதியில் அரசுக்கு சொந்தமான உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு கடந்த வாரத்தை விட நேற்று காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்து விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி வரி கத்திரிக்காய் கிலோ ரூ.34க்கும், மணப்பாறை கத்தரிக்காய் ரூ.40க்கும், வெண்டைக்காய் ரூ.26க்கும், புடலங்காய் ரூ. 26, 30க்கும், பாகற்காய் ரூ.46, 56க்கும், பீர்க்கங்காய் ரூ.44க்கும், பல்லாரி ரூ.28க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், சாம்பார் வெங்காயம் ரூ.54க்கும், தக்காளி ரூ.16க்கும், உருளைக்கிழங்கு ரூ.34க்கும், சேனை கிழங்கு ரூ.70க்கும், சேப்பங்கிழங்கு ரூ.70க்கும், கருணைக்கிழங்கு ரூ.60க்கும், பீட்ரூட் ரூ.44க்கும், கேரட் ரூ.36க்கும், சௌசௌ ரூ.24க்கும், பச்சை மிளகாய் ரூ.30க்கும், முருங்கைக்காய் ரூ.74க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், முள்ளங்கி ரூ.24க்கும், கொத்தவரங்காய் ரூ.30க்கும், மாங்காய் ரூ.26க்கும், முட்டைக்கோஸ் ரூ.22க்கும், பரங்கிக்காய் ரூ.18க்கும், பூசணிக்காய் ரூ.18க்கும், சுரைக்காய் ரூ.20க்கும், இஞ்சி ரூ.56க்கும், கருவேப்பிலை ரூ.40க்கும், மல்லிக்கட்டு ரூ.55க்கும், புதினாக்கட்டு ரூ.45க்கும் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை அறிந்ததும் தஞ்சை நகரில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் திரளாக வந்து வீட்டுக்கு தேவையான காய்கறிகளை சென்றனர்.

The post தஞ்சை உழவர் சந்தையில் காய்கறிகள் விலை சரிவு தக்காளி கிலோ ரூ.16க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: