செய்யூர், ஏப்.9: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த ஓணம்பாக்கம் கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கிராம மக்கள் பயன்பெறும் விதமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய கூடம் கட்டப்பட்டது. இதனை ஏழை, எளிய மக்கள் தங்களது குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தி பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில், சமுதாய கூடத்தில் பராமரிப்பு பணிகள் முடங்கியதால் சமுதாய கூடத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் ஏழை மக்கள் தனியார் மண்டபங்களுக்கு அதிக பணம் செலவு செய்து குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். எனவே பழைய சமுதாயக் கூடம் கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக நவீன கட்டமைப்பு வசதிகளுடன் சமுதாய கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கிராம மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
The post ஓணம்பாக்கம் ஊராட்சியில் புதிய சமுதாய கூடம் அமைக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.