விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு, ஏப்.23: விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் நாளை மறுநாள் (25ம் தேதி) காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: