திருச்சியில் குட்கா விற்றவர் கைது

திருச்சி, மார்ச் 20: திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி ராம்ஜி நகர் மில் காலனியை சேர்ந்தவர் திலக் (49). இவர் ராம்ஜி நகர் மாரியமன் கோயில் தெரு பகுதியில் டூவீலரில் நேற்று முன்தினம் வந்தார். அப்போது, அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போலீசார், டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 1.414 கிலோ கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் திலக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post திருச்சியில் குட்கா விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: