கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

 

கறம்பக்குடி, மார்ச் 21: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கருப்பட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிங்காரம். இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகிறார். மேய்ச்சலுக்குச் சென்ற இவருடைய ஆடு ஒன்று நேற்று மாலை கிணற்றுக்குள் வழி தவறி விழுந்து விட்டது. கிணற்றுக்குள் விழுந்து கத்திக் கொண்டிருந்த ஆட்டை பார்த்தவுடன் அங்கிருந்த மக்கள் உடனடியாக கரம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சிறைசீலன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்டு உரிய உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

The post கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: