திருச்சி, மார்ச் 21: திருச்சியில் கத்தியைகாட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் ரவுடி கைது செய்யப்பட்டார். திருச்சி எ.புதுார் முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (47). இவர் எ.புதுார் புதுக்குடிநீர் தொட்டி அருகே கடந்த 19ம் தேதி நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ரவுடிகள் எ.புதுார் அருண் (எ) அருள்தாஸ் (33) மற்றும் சதீஸ் (எ) அந்தோனி (29) ஆகிய இருவரும் பாலசுப்ரமணியனை கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார். இது குறித்து எ.புதுார் போலீசார் வழக்கு பதிந்து அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சதீஸை தேடி வருகின்றனர்.
The post கத்தி முனையில் பணம் பறிக்க முயன்ற ரவுடி கைது appeared first on Dinakaran.