திருவாரூர் ராஜகோபாலசாமி கோயிலில் ராஜ அலங்கார சேவை

 

மன்னார்குடி, மார்ச் 21: தென்னகத்து தெட்சின துவாரகை என்று அழைக்கப்படும் மன்னார்குடி ராஜ கோபால சுவாமி கோயிலில் 18 நாள் பங்குனி பிரமோற்சவ பெருவிழா கொடி யேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. பங்குனி பிரமோற்சவ பெருவிழாவில் 3ம் நாளான நேற்று காலை உற்சவர் பெருமாள் பல்லக்கு சேவையில் கோயிலில் இருந்து புறப்பட்டு நான்கு வெளி ராஜ வீதிகளின் வழியாக பந்தலடி வந்து யானைக்கால் வாகன மண்டபத்திற்கு வந்தார். அங்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

பின்னர், பெருமாள் ராஜ அலங்காரத்தில் வெள்ளி ஹம்ச வாகனத்தில் எழுந் தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர்..விழாவிற்காக ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் மாதவன், அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் மனோகரன், லதா வெங்க டேசன், நடராஜன் மற்றும் மண்டக படிதாரர்கள், தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

The post திருவாரூர் ராஜகோபாலசாமி கோயிலில் ராஜ அலங்கார சேவை appeared first on Dinakaran.

Related Stories: