உசிலம்பட்டி அருகே விபத்தில் பள்ளி மாணவி பலி

உசிலம்பட்டி. மார்ச் 20: உசிலம்பட்டி அருகே ஆட்டோ மீது டூவீலர் மோதிய விபத்தில் பள்ளி மாணவி பரிதாபமாக பலியானார். உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியை சேர்ந்தவர் பூமிராஜா. ஆடு வியாபாரியான இவரது மனைவி ஜோதி. இவர்களது மகள் ரித்திகா (9) அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக். பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளியில் இருந்து ரித்திகா மற்றும் மூன்று மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ஆட்டோ அவர்களை வீடுகளில் கொண்டு சேர்க்க புறப்பட்டது.

அந்த ஆட்டோ வடுகபட்டி விலக்கு பகுதியில் மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது.அப்போது உசிலம்பட்டியிலிருந்து மதுரை சென்ற டூவீலர் திடீரென ஆட்டோ மீது மோதியது. இதில் அதிலிருந்த மாணவி ரித்திகா படுகாயமடைந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த உசிலம்பட்டி போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உசிலம்பட்டி அருகே விபத்தில் பள்ளி மாணவி பலி appeared first on Dinakaran.

Related Stories: