2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திண்டுக்கல், மார்ச் 20: திண்டுக்கல்- பழநி பைபாஸ் ரோடு கொட்டபட்டி பிரிவு அருகே நேற்று குடிமை பொருள் வழங்கல் துறை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 3 வேன்களை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 2500 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் ரேஷன் அரிசி, வேன்களை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட செல்வமணி (26), முருகபாண்டி (24), அருண்பாண்டியன் (24), வெங்கட்ராமன் (29) ஆகியோரை கைது செய்தனர்.

The post 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: