லாரி மோதி பெண் பலி

குஜிலியம்பாறை, மார்ச் 20: குஜிலியம்பாறை அருகே கருங்கல் சின்னத்தம்பிபட்டியை சேர்ந்தவர் சரவணன். கூலித்தொழிலாளி இவரது மனைவி போதும்பொண்ணு (35). இருவரும் குழந்தைகளுடன் கரூர் ராயனூரில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கணவன், மனைவி இருவரும் டூவீலரில் கோவிலுக்கு சென்று விட்டு, மாலையில் ராயனூர் வீடு திரும்பியுள்ளனர். வழியில் பாளையத்தில் டூவீலரை நிறுத்தி அரவக்குறிச்சி சாலையில் உள்ள பேக்கரி கடைக்கு சென்று போதும்பொண்ணு தண்ணீர் பாட்டில் வாங்கி கொண்டு சாலையை கடந்துள்ளார். அப்போது குஜிலியம்பாறை சாலையில் இருந்து சென்ற லாரி அரவக்குறிச்சி சாலையில் திரும்பிய போது, சாலையை கடந்து சென்ற போதும்பொண்ணு மீது மோதியது. இதில் படுகாயமடைந்த போதும்பொண்ணு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post லாரி மோதி பெண் பலி appeared first on Dinakaran.

Related Stories: