வாங்கல் பகுதி வாய்க்காலில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை தேவை

 

கரூர், மார்ச் 19: கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியை ஒட்டி செல்லும் வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை விரைந்து அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாசன வசதிக்காக காவிரி மற்றும் அமராவதி ஆற்றுப்பகுதிகளில் இருந்து பாசன வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதுபோன்று கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியின் வழியாகவும் பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த பாசன வாய்க்கால் சரிவர பராமரிக்கப்படாத காரணத்தினால், அதிகளவு ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்து மோசமான நிலையில் உள்ளது.

இதுபோன்ற செடிகள் தண்ணீரின் போக்கை மாற்றும் தன்மை உள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே, ஆகாயத் தாமரை செடிகளை முற்றிலும் அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாங்கல் பகுதியின் வழியாக செல்லும் இந்த பாசன வாய்க்காலில் படர்ந்துள்ள இந்த வகை செடிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post வாங்கல் பகுதி வாய்க்காலில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை தேவை appeared first on Dinakaran.

Related Stories: