அரவக்குறிச்சி, மார்ச் 13: அரவக்குறிச்சி அருகே உள்ள எருமார்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக சூதாடிய மூவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1200ஐ பறிமுதல் செய்தனர். அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக சூதாடுவதாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் அரவக்குறிச்சி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அதில், எருமார்பட்டி அடுத்துள்ள பெத்தாச்சி நகர், சந்தைப்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட ராமசாமி (50), கேசவமூர்த்தி (38), பாலகிருஷ்ணன் (48) ஆகிய மூவரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய ரூ.1200 பறிமுதல் செய்தனர். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post அரவக்குறிச்சி அருகே சூதாடிய மூவர் கைது appeared first on Dinakaran.