பெட்டிக்கடை, டீக்கடைகளில் 1.700 கிலோ குட்கா பறிமுதல்

 

கரூர், மார்ச் 18: கரூர் மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர். மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படை அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நேற்று முன்தினம், நங்கவரம், வேலாயுதம்பாளையம், சிந்தாமணிப்பட்டி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடை மற்றும் டீக்கடைகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, அவர்களிடம் இருந்து 1 கிலோ 700 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

 

The post பெட்டிக்கடை, டீக்கடைகளில் 1.700 கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: