கரூரில் இருந்து அனைத்து பகுதிக்கும் கூடுதல் ஷேர் ஆட்டோ இயக்க கோரிக்கை

 

கரூர், மார்ச் 21: கரூர் மாநகராட்சியில் காந்திகிராமம், பசுபதிபாளையம், வேலுசாமிபுரம், வெங்கமேடு, தாந்தோணிமலை போன்ற பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் கரூர் நகரப்பகுதிகளை ஒட்டியுள்ள தொழில் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். தொழிலாளர்கள் பயணிக்க நகரப் பேரூந்துகளையே பெரும்பாலும் நம்பியுள்ளனர்.

இந்நிலையில் கரூர் பேரூந்து நிலையம் அருகில் இருந்து அதிகளவு தாந்தோணிமலை பகுதிகளுக்குத்தான் ஷேர் ஆட்டோக்கள் அதிகமாக இயக்கப்படுகிறது. மற்ற பகுதிகளுக்கு குறைவான அளவில்தான் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.எனவே, கரூரில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் கூடுதலாக ஷேர் ஆட்டோக்களை இயக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கரூரில் இருந்து அனைத்து பகுதிக்கும் கூடுதல் ஷேர் ஆட்டோ இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: