சமந்தாவிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் நாகசைதன்யா. சமந்தா மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு வந்தார். அதன்பிறகு படங்களில் கவனம் செலுத்திவந்த சமந்தா ‘திரலாலா’ என்ற தயாரிப்பு நிறுனத்தை தொடங்கி ‘சுபம்’ என்ற படத்தை தயாரித்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ‘மா இன்டி பங்காரம்’ என்ற படத்தை தயாரித்து, நடிக்கவுள்ளார். ராஜ், டிகே இயக்கத்தில் ‘ரக்த் பிரம்மந்த்: தி ப்ளடி கிங்டம்’ என்ற வெப் தொடரிலும் நடிக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் சமந்தா அளித்த பேட்டியில் விவாகரத்துக்கு பிறகு தான் இருந்த மனநிலை பற்றி ஓப்பனாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, ‘‘ஒரு கட்டத்தில் இது போதும், இனி என்னால் இதைச் பொறுத்துக்கொள்ள முடியாது என்று நினைத்தேன். அப்போது எனக்கு பல மோசமான எண்ணங்கள் தோன்றியது. அதைச் செய்ய எனக்கு தைரியம் இல்லை என்பதுதான் உண்மை. விவாகரத்து பெற்ற ஒரு வருடம் எனக்கு கடினமாக இருந்தது. எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எனக்குள் தோன்றிய பல கேள்விகளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. நான் திரும்பிய ஒவ்வொரு திசையிலும் எல்லாமே உடைந்ததாகத் தோன்றியது.
நான் பயந்துவிட்டேன், ஏனென்றால் இந்த எண்ணங்களின்படி செயல்பட நிறைய தைரியம் தேவை. அதனால் நான் ஒருவித மன உறுதியைக் உருவாக்கிக்கொண்டு ஒரு வழியைக் கண்டறிந்து, என் வாழ்க்கையில் நான் செய்யக்கூடிய பிற விஷயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். என் தோல்விகளும், நான் பட்ட கஷ்டங்களும் என் வெற்றியை விட எனக்கு அதிகம் பாடங்களை கற்றுக்கொடுத்தன’’ என்று பேசினார்.