இந்நிலையில், தீபிகா படுகோனுக்கு ஆதரவாக இயக்குனர் மணிரத்னம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘அது ஒரு நியாயமான கோரிக்கை என்று நான் நினைக்கிறேன். அதை கேட்கும் இடத்தில் அவர் (தீபிகா படுகோன்) இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு திரைப்பட இயக்குனராக, இதை கருத்தில் கொள்வது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன். அவர் கேட்பது நியாயமற்ற விஷயம் இல்லை. ஒரு முழுமையான அடிப்படை தேவையாகும். அதுதான் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதை புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும்’ என்று பேசியுள்ளார்.
ஸ்பிரிட் படத்தால் இயக்குனருடன் மோதல்: தீபிகா படுகோனுக்கு மணிரத்னம் ஆதரவு
