ஆபாச காட்சிகள் அதிகம்; கதையை லீக் செய்து விட்டார்: தீபிகா படுகோன் – இயக்குனர் மோதல்

மும்பை: இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ என்ற படத்தை இயக்குகிறார். அந்த படத்தில் முதலில் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிக்க இருந்தார். ஆனால் அவர் சமீபத்தில் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தி பரவியது. கடந்த வருடம் குழந்தை பெற்ற நிலையில் தீபிகா படுகோன் ஷூட்டிங் வர சில கண்டிஷன்கள் போட்டதாக கூறப்படுகிறது.

ஒரு நாளுக்கு 6 மணி நேரம் தான் ஷூட்டிங் வருவேன் என தீபிகா கூறியதால் இயக்குனர் சந்தீப் அவரை நீக்கிவிட்டார் என செய்தி பரவியது. அவருக்கு பதில் அனிமல் நடிகை திரிப்தி டிம்ரி நடிப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வந்தது. ஏ ரேட்டட் படம் என்பதால் தான் தீபிகாவுக்கு பதில் தற்போது திரிப்தி திம்ரியை சந்தீப் ரெட்டி வங்கா நடிக்க வைக்கப் போகிறார் என்று செய்தி பரவி வருகிறது.

* இந்நிலையில் தீபிகா படுகோன் இதுபற்றி அளித்த விளக்கத்தில், இந்த படத்தில் பல காட்சிகளில் ஹீரோ உடன் மிக நெருக்கமாக நடிக்க வேண்டி இருந்தது என கூறி இருக்கிறார். ரத்தம் தெறிக்கும் காட்சிகள் ஒருபக்கம் இருக்க, பல ஆபாசமான காட்சிகள் ஹீரோ – ஹீரோயினுக்கு இடையே இருக்கிறது என அவர் கூறி இருக்கிறார்.

* இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா டிவிட்டரில் இதுபற்றி கோபமாக பதிவிட்டு இருக்கிறார். ‘‘நான் ஒருவருக்கு (தீபிகாவுக்கு) கதை சொல்லும்போது, 100% நம்பிக்கையுடன் சொல்கிறேன். அதை யாருக்கும் சொல்ல கூடாது என ஒரு சொல்லப்படாத உடன்படிக்கை இருக்கிறது. ஆனால் இதை வெளியில் கூறி நீங்கள் யார் என்பதை காட்டிவிட்டீர்கள். ஒரு இளம் நடிகையை (திரிப்தி டிம்ரி) கீழே தள்ளி, என் கதையை வெளியில் சொல்லி.. இது தான் உங்கள் feminism-மா?.’’ என காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.

Related Stories: