மேலும், ‘பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சியை எடிட்டிங் செய்ய தயார். படத்தை மறுஆய்வு செய்ய தனி குழு அமைக்க வேண்டும்’ என்றும் வெற்றிமாறன் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், ‘மனுசி’ படத்தை உடனே பார்வையிட்டு மறுஆய்வு செய்யப்படும் என்றும், படத்திலுள்ள ஆட்சேபகரமான காட்சி மற்றும் வசனங்கள் குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் உறுதி அளித்துள்ளது. தனது படத்துக்கு சென்சாரில் பிரச்னை ஏற்பட்டுள்ளதை அறிந்த ஆண்ட்ரியா, அதிக டென்ஷனுடன் காணப்படுகிறார்.
ஆண்ட்ரியா படத்துக்கு சென்சாரில் சிக்கல் நீடிப்பு
