ரசிகர்களுக்காகவே உயிர் என்று உருகிய திரிஷா

தற்போது திரிஷா பெரிதும் நம்பி காத்திருக்கும் படம், ‘தக் லைஃப்’. இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பேசிய திரிஷா, ‘கமல் சாரும், மணிரத்னம் சாரும் ‘நாயகன்’ படத்துக்கு பிறகு மீண்டும் இணைந்து பணிபுரிய 37 வருடங்கள் காத்திருந்தேன். சில படங்கள் எனக்கு எப்போதுமே ஸ்பெஷலாக இருக்கும். அதற்கான காரணம் தெரியவில்லை. கமல் சார் எங்கு பேசினாலும், ‘இன்னும் நான் சினிமாவை கற்றுக்கொள்ளும் மாணவன்தான்’ என்று பணிவுடன் சொல்கிறார். இப்போது நான் அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்று வருகிறேன். ‘தக் லைஃப்’ படத்தின் கேரக்டருக்கு நான் பொருந்தி இருப்பேனா என்று எனக்கும், மணி சாருக்கும் தெரியவில்லை.

அவர் அளித்த ஒரு பேட்டியில், குந்தவை கேரக்டருக்கு நேரெதிரான கேரக்டர் என்று சொல்லியிருந்தார். டிரைலரை பார்த்தவர்கள், நான் யாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன் என்று ஆர்வத்துடன் கேட்கின்றனர். ரசிகர்கள் பார்த்தது சில நிமிட காட்சிகள்தான். இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஓடும் படத்தை பார்த்தால், நான் யாருக்கு ஜோடி என்ற விஷயம் புரியும். நான் இந்த படத்தில் நடிக்காமல் போயிருந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்காக இங்கு வந்திருப்பேன். எனது உயிர் எப்போதுமே ரசிகர்களுக்குத்தான். இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல், ‘முத்த மழை’. இதில் நான் ஏற்றிருப்பது பாடகி வேடம் என்று சொல்ல முடியாது.

ஆனால், இசையை விரும்பக்கூடிய ஒருத்தியாக வருகிறேன். இந்த படத்தில் எல்லோருமே பாசிட்டிவ்தான். ஆனால், எல்லோருக்குமே கிரே ஷேட் இருக்கும்’ என்றார். ‘மன்மதன் அம்பு’, ‘தூங்காவனம்’ ஆகிய படங்களுக்கு பிறகு கமல்ஹாசனுடன் 3வது முறை இணைந்துள்ள திரிஷா, அதுபோல் சிம்புவுடன் ‘அலை’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஆகிய படங்களுக்கு பிறகு 3வது முறையாக இணைந்துள்ளார்.

Related Stories: