சுஹாசினி கூறுகையில், ‘மணிரத்னத்துக்கும், எனக்கும் சரியான புரிதல் இருப்பது இசை என்ற ஒரு விஷயத்தில்தான். அவர் மிகவும் பொறுமைசாலி. அவர் எல்லாவற்றையும் ரொம்ப ஈஸியாக எடுத்துக்கொள்வார். நான் அவரிடம் சண்டை போட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்றால் கூட, அந்த சூழ்நிலையை காமெடியாக மாற்றிவிடுவார். எங்கள் தலையில் இடியே விழக்கூடிய விஷயமாக இருந்தாலும் கூட, அதை காமெடியாக மாற்றிய பல தருணங்கள் இருக்கிறது. சினிமா எங்களுக்கு ஒரு பந்தமாக இருக்கிறது. எனது வேலைகளில் அவர் பெரிதாக தலையிட மாட்டார்.
காரணம், அதை கவனிக்கக்கூடிய அளவு கூட அவருக்கு நேரம் இருக்காது. அவரது பணிகளில் முழுமையாக மூழ்கி விடுவார். என்னை பொறுத்தவரையில், கணவர் அவசரமாக வேலைக்கு செல்லும்போது, ‘காபி வேண்டுமா?’ என்று கேட்பவர் மனைவி இல்லை. ‘செல்லும் இடத்தில் உங்களுக்கு காபி கிடைக்குமா?’ என்று கேட்பவரே உண்மையான மனைவி. சின்னச்சின்ன விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருந்துவிட்டு, பெரிய விஷயங்களை எளிதாக கைவிடுவதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை’ என்றார்.