திருவாரூர், மே 23: திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜர் கோயில் தெப்பத் திருவிழா இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள நிலையில் நேற்று வெள்ளோட்டம் நடைபெற்றது.
திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் , சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் பூங்கோயில் என்று அழைக்கப்பட்டு வரும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும்,உற்ச்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர்.
The post திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜர் கோயில் தெப்பத் திருவிழா appeared first on Dinakaran.