திருமங்கலம், ஜூன் 13: திருமங்கலம் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவரது பெற்றோர், உறவினர் மீது மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய மகளிர்நல அலுவலர் தமிழ்செல்வி(56). இவருக்கு 1098 என்ற எண்ணின் மூலமாக சாத்தங்குடி கிராமத்தினை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த மே 28ம் தேதி திருமங்கலம் அருகே அர்ஜூன்(25) என்ற வாலிபருடன் இருதரப்பு பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதாக தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து தமிழ்செல்வி விசாரணை நடத்தியதில், தகவல் உண்மை என தெரியவந்தது. இதுகுறித்து அவர் திருமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ராதிகா சிறுமியை திருமணம் செய்த வாலிபர் அர்ஜூன், அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post சிறுமியுடன் திருமணம் வாலிபர், பெற்றோர் மீது வழக்கு appeared first on Dinakaran.