பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த சமூக சேவகருக்கு விருதுகள்: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

அரியலூர் மே 22: 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்; 2025-ம் ஆண்டு சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுக்கு விண்ணப்பிக்க, தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும், குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம், போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுன்றன.

தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். விருதுக்கு 12.06.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்க இயலாது. இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் // awards.tn.gov.in விண்ணப்பித்து அதன் நகலினை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த சமூக சேவகருக்கு விருதுகள்: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: