நெடுஞ்சாலை பெயர் பலகையில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி

 

பொன்னமராவதி, மே 19: பொன்னமராவதி அருகே நெடுஞ்சாலை பெயர்பலகையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பொன்னமராவதி அருகே உள்ள நல்லூர் சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் ரவிக்கண்ணன்(27). இவர், கடந்த 16ம் தேதி புதுக்கோட்டையிலிருந்து சுந்தரம் நகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கீரங்குடி பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் உள்ள பெயர்பலகையில் மோதியது.

இதில், தலையில் பலத்த காயமடைந்த ரவிக்கண்ணன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது‌குறித்து, காரையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post நெடுஞ்சாலை பெயர் பலகையில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: