பசுபதிபாளையம் அருகே கடையில் குட்கா விற்க முயன்றவர் மீது வழக்கு

 

கரூர், மார்ச் 25: கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார் , மதுவிலக்கு போலீசார் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர். மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படை அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கரூர் பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொளந்தாகவுண்டனூர் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சோதனை மேற்கொண்டபோது, 250 கிராம் எடையுள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடையில் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், விற்பனை செய்ய முயன்றவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பசுபதிபாளையம் அருகே கடையில் குட்கா விற்க முயன்றவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: