கரூர் சுங்ககேட் பகுதி பேருந்து நிறுத்த நிழற்குடையில் இருக்கைகள் அமைத்து தர கோரிக்கை

 

கரூர், மார்ச் 25: கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் அமைத்து தர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில், கலெக்டர் தங்கவேலுவிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க பேரவை நிர்வாகி சுடர்வளவன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள பேரூந்து நிறுத்தம் அதிகளவு பயணிகள் வந்து செல்லும் நிறுத்தமாக உள்ளது. இந்த பேரூந்து நிறுத்தத்தில் அருகே உள்ள பயணிகள் நிழற்குடையில் சரியான முறையில் இருக்கைகள் இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் சிரமங்களை அனுபவிக்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், முதியோர்கள் உள்பட அனைவரின் நலன் கருதி நிழற்குடையின் உட்புறம் இருக்கை வசதி அமைத்து தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

The post கரூர் சுங்ககேட் பகுதி பேருந்து நிறுத்த நிழற்குடையில் இருக்கைகள் அமைத்து தர கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: